FOLLOW US

ON GOOGLE DISCOVER

அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

ஓடிடியில் வெளியான துஷாரா விஜயனின் காட்டாளன்!

காட்டாளன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

காட்டாளன் போஸ்டர் - படம்: எக்ஸ்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:18 pm IST

துஷாரா விஜயன் நடித்துள்ள காட்டாளன் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவான காட்டாளன் திரைப்படம் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது. யானை தந்த வேட்டையை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்ததால், இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தை பால் ஜார்ஜ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். க்யூப்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்தப் படத்தின் மூலம், முதல்முறையாக நடிகை துஷாரா விஜயன், மலையாளத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் சுனில், ஜகதீஷ் மற்றும் ஆவேஷம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஹிப்ஸ்டர் ஆகியோர் நடித்துள்ளனர்.

1995-களில் நடக்கும் நிகழ்வுகளாகத் தொடங்கும் இந்தப் படத்தின் கதை, காட்டில் நடக்கும் பழிவாங்கல், கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காட்டாளன் திரைப்படம் மனோரமா மேக்ஸ் தளத்தில் இன்று(ஆக. 13) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

The movie Kaattalan, starring Dushara Vijayan, has been released on an OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.