முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

கதைக்கு அப்பால்... எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வத்தின் புதிய முயற்சி!

எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் ஒவ்வொரு கதைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசவுள்ளது குறித்து...

News image

இயக்குநர் திருச்செல்வம் - இன்ஸ்டாகிராம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 4:27 pm IST

எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் ஒவ்வொரு கதைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசவுள்ளார். தன்னுடன் பணியாற்றிய பிரபலங்களை அழைத்து அவர்களுடன் உரையாடல் நடத்தவுள்ளார்.

கோலங்கள், அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசிக்குடும்பம், வல்லமை தாராயோ ஆகிய தொடர்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இயக்குநர் திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடர் மூலம் இளம் தலைமுறையினரையும் கவர்ந்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், சிறந்த தொடருக்கான தமிழக அரசின் விருதை 4 பிரிவுகளில் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி சன் குடும்ப விருதுகளையும் குவித்துள்ளது.

எதிர்நீச்சல் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். தனது நெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் தற்போது புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, ஒவ்வொரு கதையில் வரும் நடிகர்கள் மட்டுமின்றி அதற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள், ஒவ்வொரு கதைக்கு பின்னால் உள்ள கதைகள் குறித்துப் பேசவுள்ளார்.

சேர் டிக்கெட் என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கி நடத்திவரும் திருச்செல்வம், இதில் பல நடிகர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். இதனிடையே தற்போது கதைக்கு அப்பால் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளார்.

அதில் கதையில் தோன்றும் ஒவ்வொரு கலைஞரின் அரசியல், கருத்து, உழைப்பு, கடந்து வந்த பாதை, மகிழ்ச்சி, சோகம், தவறுகள், தியாகங்கள் என பலதரப்பட்ட விஷயங்களைப் பேசவுள்ளார். அவருன் பணியாற்றிய கலைஞர்கள் பலர் இதில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

நூறு தலைப்புச் செய்தியை விட உரையாடல் அதிகம் சொல்லித் தரும் எனக் குறிப்பிட்டுள்ள திருச்செல்வம், இது நேர்காணல் அல்ல, உரையாடல் எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள ப்ரோமோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary

Ethirneechal director thiruselvam host news show in chait ticket new programe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.