முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த நடிகர் சூர்யா!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மூலம் சூர்யாவுக்கு புதிய சாதனை...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2026, 1:29 pm IST

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்திற்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் முதல் இரண்டு நாள்களிலேயே உலகளவில் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Story image

முக்கியமாக, அமெரிக்காவில் விரைவாக 1 மில்லியன் டாலர்களைக் கடந்த முதல் சூர்யா திரைப்படம் என்கிற என்கிற சாதனையையும் படைத்தது. இந்த நிலையில், இதுவரை அமெரிக்காவில் 1.6 மில்லியன் டாலருக்கும் (ரூ. 15 கோடி) அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, அங்கு அதிகம் வசூலித்த சூர்யா திரைப்படமாகும். ஐரோப்பாவிலும் நல்ல வசூலையே அடைந்துள்ளது.

மேலும், இந்தியாவிலேயே 30 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியதால் இப்படம் ரூ. இந்த வார இறுதிக்குள் ரூ. 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Actor Suriya's film Viswanath and Sons has garnered good box-office collections in the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.