

நடிகர் பாசில் ஜோசஃப் நடிகர் ரஜினிகாந்துக்கு மகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் முன்னணி இயக்குநர், நடிகராக இருப்பவர் பாசில் ஜோசஃப். மின்னல் முரளி இயக்குநரான இவர் நடிகராகவும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். ஜெய ஜெய ஜெய ஹே, ஃபலிமி, குருவாயூர் அம்பலநடையில் ஆகிய திரைப்படங்கள் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கலக்கின.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், சிறிய கதாபாத்திரம் என்பதால் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் - 173 திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்க பாசில் ஜோசஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.