

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பைசன் வெற்றிக்குப் பின் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் தனுஷின் திரைப்படத்தை இயக்கவுள்ளார். வரலாற்று கால படமாக உருவாகும் இது மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் சூர்யாவின் 50-வது திரைப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்றும் இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யாவின் 45-வது படமாக கருப்பு உருவாகியுள்ளது. 46-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கட் அட்லுரியும் 47ஆவது திரைப்படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவனும் இயக்கி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.