இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநர், நடிகராக இருக்கும் சுந்தர். சி பல வெற்றி திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா, அரண்மணை - 4 ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக எதிர்பாராத வரவேற்பைப் பெற்றன.
அடுத்ததாக, நடிகர் விஷாலை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், சுந்தர். சியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் எங்கள் இயக்குநர் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கார்த்தி தொடர்ந்து நடித்து வருவதால், சுந்தர். சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கலாம் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.