குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் அசோக்குமார் தனக்கு தமிழக அரசின் விருது கிடைக்காத விரக்தியில், ”ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் நடிப்பதே வீண்தானே? ஏன் இந்த மாதிரியான அநியாயம் செய்கிறார்கள் எனப் புரியவே இல்லை” என விடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த விடியோ வைரலான நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இந்தச் சிறுவனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சண்டைகோழி 2 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஸ்வந்த் அசோக்குமார். தனது சிறப்பான நடிப்பினால் சூப்பர் டீலக்ஸ், ஐரா, மை டியர் பூதம் படங்களில் கவனம் பெற்றார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் பெற்ற இவரது நேர்காணல்கள் மீம்ஸ்களில் வைரலானது.
சமீபத்தில் தமிழக அரசு திரைப்படத்துறைக்கான விருதுகள் 2014-22 வரைக்குமான படங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இந்த விருதில் பலருக்கும் விருது கிடைத்தாலும் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு விருது கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுவன் அஸ்வந்த் அசோக்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:
செய்தி இப்போதுதான் தெரியவந்தது. நமது தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், நான் இருப்பேன் என்று நினைத்தேன்; ஆனால் இல்லை. 2019-ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுக்குட்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் நிச்சயமாகக் கிடைக்குமென நம்பினேன்.
இந்தப் படத்திற்குதான் கிடைக்கவில்லை. சரி, 2022-ல் வெளியான மைடியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் நம்பினேன். அதிலும் கிடைக்கவில்லை. தேர்வுக்குழுவினர் இந்த மாதிரி படங்களைப் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை?
ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் நடிப்பதே வீண்தானே? ஏன் இந்த மாதிரியான அநியாயம் செய்கிறார்கள் எனப் புரியவே இல்லை. பார்வையாளர்களான நீங்களே சொல்லுங்கள், அந்த வயதில் அந்த நடிப்புக்குமேல் என்ன வேண்டுமென நீங்களே சொல்லுங்கள் எனக் கூறி வருத்தத்துடன் விடியோவை முடித்துள்ளார்.
Summary
Child actor Ashwanth Ashokkumar, frustrated at not receiving a Tamil Nadu government award, has released a video saying, "Why does an artist act? If there is no recognition, isn't acting pointless? I don't understand why they are doing such an injustice".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி மையம் கட்ட எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

குதிரை பேரம் வழக்கில் செந்தில் பாலாஜி, அசோக்குமார் மனுக்கள் தள்ளுபடி: கைது செய்ய திட்டமிடும் போலீஸ்..?

நான் பதிவு செய்துள்ளேன்! - மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி விடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 15) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




