இயக்குநர் ஏ. எல். விஜய் முதல்வர் விஜய்யைச் சந்தித்து தலைவா திரைப்படத்தின் புகைப்படத்தைக் கொடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் நடிகராக இருந்த போது, அவரது பல திரைப்படங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்பட்டாலும் இப்போதும் ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொன்னால், அது விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கான படம் என்றே கருதப்படுகிறது. இயக்குநர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படம்தான் அது.
தலைவாவுக்கு வந்த பிரச்னையைத் தமிழ் சினிமா எப்போதும் மறக்காது. டீசர், டிரைலரிலேயே படம் விஜய்யின் வழக்கமான படம் கிடையாது ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என பரபரப்பு பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஏற்ப, “Time to lead” என்கிற வாசகத்துடன் தமிழகத்தைத் தவிர உலகம் முழுவதும் தலைவா வெளியானது. கூட்டம், கூட்டமாக விஜய்யைத் திரையில் காண அண்டை மாநிலங்களுக்கு ரசிகர்கள் விரைந்தனர்.
பல பேச்சுவார்த்தைகள், மறைமுக அழுத்தங்களுக்குப் பின், “time to lead" வாசகத்தை நீக்கிய பின்பு, தமிழகத்தில் 11 நாட்கள் தாமதமாக தலைவா வெளியானது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன் எஸ். ஏ. சந்திரசேகர் உடன், அருகே கைகட்டியபடி விஜய் இருந்த புகைப்படம் இன்றும் சமூக வலைதளத்தில் சுற்றலில் இருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கான முட்டுக்கட்டையாக தலைவாவை எடுத்துக்கொள்ளாமல் இதுதான் ஆரம்பம் என விஜய் உள்ளூர நினைத்திருக்க வேண்டும்.

தற்போது, விஜய் முதல்வரான பின்பு இயக்குநர் ஏ. எல். விஜய் அவரை நேரில் சந்தித்து தலைவா திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘time to lead' வாசகத்துடன் விஜய்யின் பிரபலமான தோற்றத்தைக் கொண்ட புகைப்படத்தை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். காலம் என்னவெல்லாம் செய்கிறது? விஜய் அன்று தனக்கு இப்படியொரு இடம் கிடைக்குமா? என்பதில் சந்தேகத்திருக்கலாம். ஆனால், இப்போது காலம் என்னவெல்லாம் செய்துவிட்டது!
Director A. L. Vijay met Chief Minister Vijay and presented him with a photograph from the movie Thalaiva.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








