FOLLOW US

ON GOOGLE DISCOVER

தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

ஜன நாயகனுக்காக இரண்டு முறை அழுதேன்: இயக்குநர் ஹெச். வினோத்

இயக்குநர் ஹெ. வினோத் ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்...

News image

இயக்குநர் ஹெச். வினோத், முதல்வர் விஜய்

Updated On :21 ஜூலை 2026, 11:35 am IST

இயக்குநர் ஹெச். வினோத் ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.

முன்பதிவிலும் இதுவரை, 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதால் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூலைக் குவிக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத்,"ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் பொங்கல் வெளியீட்டாக வெளியாகாது என தெரிந்தபோதும், அப்படம் முழுமையாக இணைதளங்களில் கசிந்த போதும் இரண்டு முறை அழுதேன். அப்போது, விஜய் சார் அழைத்து, ‘இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். மனதிற்குக் கஷ்டமாக இருக்கும்போது என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்றார். நீண்ட காலம் கழித்து நான் அழுதது ஜன நாயகன் திரைப்படத்திற்குத்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

Director H. Vinoth has spoken about the film Jana Nayagan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.