நடிகர் சூர்யா - இயக்குநர் ஞானவேல் இணையும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே தயாரிக்கிறது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ். கே.ஜி.எஃப், சலார், காந்தாரா என இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
ஹொம்பாலே நிறுவனம் தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து அடுத்தப் படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. கருப்பு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு விஸ்வநாதன் & சன்ஸ் படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்ததாக மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ஹொம்பாலே நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
அதில், ‘இந்தத் தலைமுறையின் அச்சமற்ற நடிகர், இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மேடையில் அடியெடுத்து வைக்கிறார்’ எனக் குறிப்பிட்டு ஹொம்பாலே நிறுவனம் பதிவிட்டுள்ளது.
சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
Summary
Hombale is producing the film that brings together actor Suriya and director Gnanavel
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











