ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கருப்பு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

கருப்பு படக்குழுவினருக்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்தது குறித்து...

Kamal haasan

கருப்பு பட போஸ்டர், கமல் ஹாசன் - X - ஆர். ஜே. பாலாஜி, கோப்புப் படம்

Published On :15 மே 2026, 12:05 pm IST

சூர்யா நடித்து வெளியாகியுள்ள கருப்பு படக்குழுவினருக்கு கமல் ஹாசன் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில், நடிகை த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படம் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு பணம் கொடுக்க வேண்டிய பிரச்னையால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை எனக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது.

இதற்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன், தனது எக்ஸ் பக்கத்தில், “தம்பி சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Kamal Haasan extended his wishes on Friday to the team behind the recently released film Karuppu, starring Suriya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.