
ஹிந்திக்கு துரந்தர், தமிழுக்கு அரசன்..! நடிகர் சிம்பு நம்பிக்கை!
நடிகர் சிலம்பரசன் அரசன் திரைப்படம் குறித்து பேசியிருப்பதாவது...

துரந்தரில் ரன்வீர் சிங், அரசனில் சிம்பு. - படங்கள்: எக்ஸ் / ஜியோ ஸ்டூடியோஸ், வி கிரியேஷன்ஸ்.
நடிகர் சிலம்பரசன் அரசன் திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ஹிந்தி சினிமாவுக்கு எப்படி துரந்தர் திரைப்படம் அமைந்ததோ அதுபோல் தமிழ் சினிமாவுக்கு அரசன் திரைப்படம் அமையும்” எனக் கூறியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இது வட சென்னை உலகில் நடைபெறும் கதையாக இருக்கிறது.
வி கிரியேஷன் சார்பாக எஸ். தாணு அரசன் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். புரோமோ காட்சியில் இவரது இசைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்பு பேசியிருப்பதாவது:
அரசன் படத்திற்காக அனிருத் உடன் இணைந்துள்ளேன். அரசன் படம் பல்வேறு நிஜமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. வெற்றி சார் மிகவும் முழுமையை விரும்புவார்.
ஹிந்தியில் வெளியான துரந்தர் படம் எப்படி இந்தியா முழுக்க பார்த்து ரசித்தார்களோ அதுபோல அரசன் இருக்கும். துரந்தர் படம் எப்படி ஹிந்தி சினிமாக்கு பெருமையோ அதுபோல தமிழுக்கு அரசன் திரைப்படம் இருக்கும்.
அரசன் சிறிய படமல்ல. இதில் சிறிய வயதில் இருந்து பல்வேறு வயதுக்கான தோற்றத்தில் நடித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் துரந்தர் படத்தை வெறுப்பு பிரசாரத்தை செய்யும் படமெனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Dhurandhar for Hindhi cinema Arasan for Tamil Cinema says actor Simbhu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







