உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

டோரதி படத்தின் டிரைலர் அறிவிப்பு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டோரதி போஸ்டர்

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்தத் திரைப்படம் டோரதி. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1980-களில் நடக்கும் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்றைய காலத்து இளைஞர்களும் கொண்டாடும் விதமாக இளையராஜா பாடல்கள் அமைந்துள்ளன.

டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சில நாள்களுக்கு முன் இப்படம் திரையிடப்பட்டது. அங்கு, படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகக் கூறப்பட்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, டோரதி படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. படம் வருகிற செப்.25 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.

Summary

Dorothy movie trailer announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER