ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை!

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

முதல் குழந்தை துவா உடன் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்

Published On :

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு செப். 8 2024 -இல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘துவா’ எனப் பெயரிட்டனர்.

துவாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தீபிகா படுகோன் இரண்டாவது முறையாக கருவுற்று இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மகிழ்ச்சிச் செய்தியைப் பகிர்ந்திருந்தனர். அப்பதிவில், கருவுற்று இருப்பதை பரிசோதனை செய்யும் சாதனத்தை தீபிகாவின் மகள் துவா கையில் பிடித்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், ரன்வீர் - தீபிகா தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதுமுள்ள திரைத்துறையினர் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரன்வீர் சிங் ‘துரந்தர் 2’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோன் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ‘ராக்கா’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

Summary

Deepika Padukone and Ranveer Singh have welcomed their second baby girl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER