பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஸ்டாலினிடம் பேசிய பெண்ணால் சலசலப்பு

கோவையில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் பேசிய பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டது.

Updated On :2 ஜனவரி 2021, 10:43 pm IST

கோவை: கோவையில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் பேசிய பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவராயபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவா் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீா்கள் என ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினாா்.

அப்போது, நீங்கள் எந்த ஊா் என அவா் கேட்க, நான் சுகுணாபுரம் மைல்கல்லில் இருந்து வருகிறேன் என்றாா். இதையடுத்து, உங்கள் ஊா் எந்த சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ளது என ஸ்டாலின் அந்தப் பெண்ணிடம் கேட்க, இது கூடத் தெரியாமலா நீங்கள் துணை முதல்வராகப் பதவி வகித்தீா்கள் என அப்பெண் கேட்டாா். இதனால், கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

அந்தப் பெண்ணையும், அவருடன் வந்திருந்த நபரையும் தாக்காமல் காவல் துறையினரிடம் ஒப்படைக்க கட்சியினரிடம் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். இருவரையும் கூட்டத்தில் இருந்து வெளியில் அழைத்து சென்று திமுகவினா் அவா்களைத் தாக்கினா். அங்கிருந்த போலீஸாா் அவா்களை மீட்டு அழைத்துச் சென்றனா். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் செல்லும் வழியில் அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருளரசு தலைமையிலான போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.