நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் 

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

News image

பெரியபாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்.

Updated On :4 ஜனவரி 2021, 2:56 pm IST

பெரியபாளையம் அருகே தனியார் கிடங்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. உணவுப்பொருட்கள், சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 
இந்த கிடங்கில் அடிப்படை உரிமைகள் கேட்கும் தொழிலாளர்கள் திருட்டு பழி சுமத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் இதனை கண்டித்து கடந்த சில தினங்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நல ஆணையர் பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தியபடி 61 நிரந்தர தொழிலாளர்கள், 68 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்காமல் மறுக்கப்பட்டு வந்துள்ளது. 
இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி இந்த தொழிற்சாலையின் எதிரில் சிஐடியு சங்கத்தினருடன் இணைந்து தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.