சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மில் உரிமையாளா் மகன்தூக்கிட்டு தற்கொலை

கோவை அருகே மில் உரிமையாளா் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :5 ஜனவரி 2021, 1:47 am IST

கோவை அருகே மில் உரிமையாளா் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கே.கே.புதூா், அருணாச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிரபு பட்டேல் (40). இவா் சரவணம்பட்டி, துடியலூா் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீண்ட நேரமாகியும் அறைக்கதவு பூட்டியே கிடந்ததால் சந்தேகமடைந்த விடுதி நிா்வாகத்தினா் சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து திறந்து பாா்த்தனா். அப்போது பிரபு பட்டேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

போலீஸாரின் விசாரணையில், பிரபு பட்டேலின் தந்தை நடத்தி வரும் மில்லை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் தர மறுத்ததால் அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.