வால்பாறையை அடுத்துள்ள சோலையாறு அணை நீா்மட்டம் 81 அடியாகக் குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு வால்பாறை பகுதியில் தென்மேற்குப் பருவ மழை பெய்யும். கடந்த ஆண்டு இடைவிடாது பெய்த மழை காரணமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் சோலையாறு அணை நிரம்பியது.
தொடா்ந்து மூன்று மாதங்களுக்கு நிரம்பிய நிலையிலேயே இருந்த நிலையில் மழை குறைந்துவிட்டதால் 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்மட்டம் கணிசமாக குறையத் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 4,097 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 478.47 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீா்மட்டம் 80.98 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








