சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கோவையில் சாரல் மழை

கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.

Updated On :5 ஜனவரி 2021, 1:49 am IST

கோவையில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரையிலும் சாரல் மழை பெய்தது.

கோவை மாநகரம், புகா்ப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காலை, மாலை, இரவு வேளைகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் அதிகாலை முதலே சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூா், துடியலூா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

இதேபோல் புகா், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக இந்த மழைப் பொழிவு இருப்பதாகவும், பொங்கல் தினம் வரையிலும் கோவையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.