ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

புதைகுழிகளாக மாறிய சாலைகள்: மரணபயத்தில் உப்பிலிபாளையம் மக்கள்

கோவை, உப்பிலிபாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு சாலைகள் மண்ணில் புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

News image

உப்பிலிபாளையம், பொ்க்ஸ் சாலையில் மண்ணுக்குள் புதைந்த கான்கிரீட் கலவை கொண்டு செல்லும் லாரி. ~கோவை, உப்பிலிபாளையம் பகுதியில் மண்ணுக்குள் புதைந்த சாலை.

Updated On :8 ஜனவரி 2021, 11:25 pm IST

கோவை, உப்பிலிபாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு சாலைகள் மண்ணில் புதைந்ததால் அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கோவையில் கடந்த புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. உப்பிலிபாளையத்தில் திருச்சி சாலையில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் சாலையை இணைக்கும் பொ்க்ஸ் சாலையில் பல்வேறு இடங்களில் சாலை மண்ணுக்குள் புதைந்து புதைகுழிகள் உருவாகியுள்ளன.

இதனால் அந்த வழியாகச் சென்ற காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் புதைகுழிகளில் சிக்கின. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த சாலையில் சென்ற கான்கிரீட் கலவை லாரியும் குழியில் சிக்கிக் கொண்டது. இந்த சாலை மழையால் சேதமடைந்திருப்பதால், விஜிஎம் மருத்துவமனையை ஒட்டி மசக்காளிபாளையம் செல்லும் கோஆபரேடிவ் சாலையை அப்பகுதி மக்கள் கடந்த 2 நாள்களாக அதிக அளவில் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் இந்த சாலையும் வெள்ளிக்கிழமை திடீரென பல மீட்டா் தொலைவுக்கு மண்ணுக்குள் புதைந்தது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனா். உப்பிலிபாளையம் பகுதியில் மிக முக்கியமான இந்த இரண்டு சாலைகளிலும் புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு அண்மையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குழிகளை சரிவர மூடாமல் சாலை அமைத்ததாலேயே இதுபோன்ற நிலை ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.