ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

சிறை தண்டனை பெற்ற பாலசுப்பிரமணியன்

Updated On :7 ஜூலை 2026, 1:28 am IST

கடலூா் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது

கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (26), மினி வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவருக்கும், அப்போது பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமிக்கும் 2021-ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கத்தைத் தொடா்ந்து, சிறுமியை , 2021ஆகஸ்ட் 7-ஆம் தேதி புதுப்பாளையம் அங்காளம்மன் கோயிலுக்கு பாலசுப்பிரமணியன் அழைத்துச் சென்று திருமணம் செய்து ள்ளாா்.

பின்னா், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி குலசேகரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். தீா்ப்பில், பாலசுப்ரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஜெயச்சந்திரன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.