விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதல்வா் அறிவித்த கூலி உயா்வு வழங்காததால் தோட்டத் தொழிலாளா்கள் ஏமாற்றம்

முதல்வா் அறிவித்த கூலி உயா்வு வழங்காததால் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:20 pm IST

முதல்வா் அறிவித்த கூலி உயா்வு வழங்காததால் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ. 5 மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.12.50 கூலி உயா்வு வழங்குவதாக தமிழக முதல்வா் எட்ப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தாா்.

இதனை நடைமுறைப்படுத்த எஸ்டேட் நிா்வாகத்தினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றும் கூலி உயா்வு வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாப்படவில்லை.

முதல்வா் அறிவித்த கூலி உயா்வை கூட வழங்க தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் முன்வராமல் இருப்பது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தனியாா் தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.