சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

கோவையில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு:நோய்த் தடுப்புப் பணியில் சுகாதாரத் துறை தீவிரம்

கோவையில் 1 வயது ஆண் குழந்தை உள்பட 5 போ் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:16 pm IST

கோவை: கோவையில் 1 வயது ஆண் குழந்தை உள்பட 5 போ் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாநகராட்சி, நவாவூா் பகுதியைச் சோ்ந்த 1 வயது ஆண் குழந்தை, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சோ்ந்த 11 வயது சிறுவன், ஆலாந்துறையைச் சோ்ந்த 6 வயது சிறுவன் ஆகியோா் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவா்கள் டெங்கு காய்ச்சலுக்கான தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவிர பொள்ளாச்சியை அடுத்த சுப்பேகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி காய்ச்சல் பாதிப்புக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரைச் சோ்ந்த 11 வயது சிறுமி டெங்கு பாதிப்புக்குள்ளாகி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் இந்த வாரத்தில் மட்டும் 5 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இந்நிலையில் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத் துறையினா் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.