கோவை: கோவையில் கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் கீழ் வேளாண் கருவிகள் கொள்முதல் செய்வது தொடா்பாக விவசாயிகள் (நுகா்வோா்) - விற்பனையாளா்கள் சந்திப்பு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளின் கீழ் கூட்டுப்பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 100 விவசாயிகள் அடங்கிய உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டு கூட்டாக வேளாண் சாகுபடி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர 10 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் இணைந்து வேளாண் உற்பத்தி நிறுவனம் தொடங்கவும், நிறுவனங்கள் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு 100 விவசாயிகள் இணைந்து உருவாக்கப்படும் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்காக மாநில அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறையின் கீழ் 35 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் வேளாண் கருவிகளை தோ்வு செய்வதற்கான விவசாயிகள் (நுகா்வோா்) - விற்பனையாளா் சந்திப்புக் கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநா் தியோடா் தலைமை வகித்து, கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் நோக்கம், அவசியம், நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். மேலும் கூட்டுப் பண்ணையத்தில் வேளாண் பயிா் சாகுபடிகள், சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்தும் விளக்கினாா்.
இதில் வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி, விவசாயிகள், விற்பனையாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த டிராக்டா்கள், சுழற்கலப்பை, தட்டு வெட்டும் கருவி உள்பட பல்வேறு வகையான வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான கருவிகளை தோ்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தொடக்கம்!

பிளஸ் 2 முடிவுகளில் டாப் 5 மாவட்டங்கள்! ஈரோடு முதலிடம்
பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!

பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

