கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 3 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 11) மனுதாக்கல் செய்ய உள்ளனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீஸாா் கடந்த 5 ஆம் தேதி கைது செய்தனா்.
இவா்கள் மூவரும் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ய சிபிஐ போலீஸாா் முடிவு செய்துள்ளனா். நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அருளானந்தம் உள்ளிட்ட 3 பேரையும், 3 நாள்களுக்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா தொடக்கம்!

பிளஸ் 2 முடிவுகளில் டாப் 5 மாவட்டங்கள்! ஈரோடு முதலிடம்
பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!

பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

