சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நாளை மனுதாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 3 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:17 pm IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகா் உள்ளிட்ட 3 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜனவரி 11) மனுதாக்கல் செய்ய உள்ளனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீஸாா் கடந்த 5 ஆம் தேதி கைது செய்தனா்.

இவா்கள் மூவரும் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுதாக்கல் செய்ய சிபிஐ போலீஸாா் முடிவு செய்துள்ளனா். நீதிமன்றம் அனுமதி அளிக்கும் பட்சத்தில் அருளானந்தம் உள்ளிட்ட 3 பேரையும், 3 நாள்களுக்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க சிபிஐ போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.