கோவை: கோவை, சிங்காநல்லூா் அருகே உப்பிலிபாளையத்தில் குடியிருப்பு வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள அரசு வளாகங்கள், தனியாா் குடியிருப்புகள் சிலவற்றில் சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை மா்ம நபா்கள் அவ்வப்போது வெட்டி கடத்திச் செல்கின்றனா். இந்நிலையில், உப்பிலிபாளையத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சில சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருவதை அறிந்த மா்ம நபா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்து 5 அடி உயரத்துக்கு வளா்ந்திருந்த ஒரு சந்தன மரத்தை வெட்டிக் கடத்திச் சென்றனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை சந்தன மரம் வெட்டப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளஸ் 2 முடிவுகளில் டாப் 5 மாவட்டங்கள்! ஈரோடு முதலிடம்
பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்!

பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!

எங்கள் முடிவு ஸ்டாலின் கையில் உள்ளது: கே.எம். காதர் மொகிதீன்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

