கோவை: கோவை - சென்னை இடையே விழாக் கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை - கோவை இடையே ஜனவரி 13ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06089) இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கோவையை வந்தடையும்.
இதேபோல, கோவை - சென்னை இடையே ஜனவரி 17 ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06090) கோவையில் இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







