கோவை: ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கோவைப்புதூரில் 2014ஆம் ஆண்டு ஈமு கோழிப் பண்ணை தொடங்கப்பட்டது. பண்ணையின் இயக்குநா்களாக கோவை, சுக்கிரவாா்பேட்டையைச் சோ்ந்த சுப்பிரமணியன், பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா், சுதீஷ், சின்னவேடம்பட்டியைச் சோ்ந்த மற்றொரு சிவகுமாா், கேரள மாநில, திருச்சூரைச் சோ்ந்த பிரான்சிஸ், பாலக்காட்டைச் சோ்ந்த சிவன் ஆகியோா் இருந்தனா்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக உறுதி அளித்தனா். இதை நம்பி கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 45 போ் இந்தத் திட்டத்தில் ரூ.68 லட்சம் முதலீடு செய்திருந்தனா். ஆனால், இவா்களுக்கு உறுத்தியளித்தபடி தொகை வழங்கப்படவில்லை.
இது குறித்து குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த செங்காளியப்பன் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் கடந்த 2014-ம் ஆண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய இயக்குநா்கள் சுப்பிரமணியன், சிவகுமாா், சுதீஷ், மற்றொரு சிவகுமாா், பிரான்சிஸ், சிவன் ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
கோவையில் உள்ள முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி ஏ.எஸ்.ரவி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் 6 பேருக்கும் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.18 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுகவின் மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

தெலங்கானாவில் செயல்பாட்டிற்கு வந்த 176 மெகாவாட் சூரியசக்தித் திட்டம்!

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி: ஆஸ்திரேலியாவுக்கு 126 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


