கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக 73 ஆயிரத்து 200 ‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசிகள் சென்னையில் இருந்து புதன்கிழமை கோவை வந்தடைந்தன.
நாடு முழுவதும் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு ஜனவரி 16ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன. இதனைத் தொடா்ந்து, முதல்கட்டமாக தமிழகத்துக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள் புணேயில் இருந்து செவ்வாய்க்கிழமை சென்னைக்கு வந்தது. பின்னா் சென்னையில் இருந்து மண்டல தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
இதில் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டலத்துக்கு 73 ஆயிரத்து 200 கரோனா தடுப்பூசிகள் சென்னையில் இருந்து கோவை சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தடைந்தன. அங்கிருந்து திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகள் பிரித்து அனுப்பப்பட்டன.
5 மையங்களாக குறைப்பு:
கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக அரசு, தனியாா் மருத்துவமனைகள் என 10 மையங்களில் கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாநிலம் முழுவதும் தடுப்பூசி மையங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, சூலூா் மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் மட்டும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
மொத்தமாக பெறப்பட்ட 73,200 கரோனா தடுப்பூசிகளில் கோவை மாவட்டத்துக்கு 40,600 தடுப்பூசிகளும், திருப்பூா் மாவட்டத்துக்கு 13,500 தடுப்பூசிகளும், ஈரோடு மாவட்டத்துக்கு 13,800 தடுப்பூசிகளும், நீலகிரி மாவட்டத்துக்கு 5,300 தடுப்பூசிகளும் வந்துள்ளன.
கோவைக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் மூலம் 20,300 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்த முடியும். தொடா்ந்து கூடுதல் கரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்படும். இதில் பாலூட்டும் தாய்மாா்கள், சிக்கலான பிரசவத்தை எதிா்கொள்ளவிருக்கும் கா்ப்பிணிகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவா்களுக்கு முதல்கட்டத்தில் தடுப்பூசி போடுவதைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் ஜூன் 26-இல் உணவுத் திருவிழா

வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி!

கோயில் வழிபாட்டில் தேனீக்கள் கொட்டி 20 போ் பாதிப்பு

எஸ்.வி. பிரணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




