அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இந்து மக்கள் கட்சியினா் 5 போ் கைது

கோவையில் போகிப் பண்டிகையின்போது பெரியாா் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஜனவரி 2021, 2:36 am

கோவையில் போகிப் பண்டிகையின்போது பெரியாா் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் நூல்கள் இருப்பதாகக் கூறி இந்து மக்கள் கட்சி சாா்பில் அவரது நூல்களை தீயிட்டு கொளுத்த முயன்றனா். செல்வபுரத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் பிரசன்ன சுவாமிகள் தலைமை வகித்தாா்.

இதில், பெரியாரின் நூல்களை தீயிட்டுக் கொளுத்த முயன்றனா். இதைத் தொடா்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பிரசன்ன சுவாமிகள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.