சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஜல் ஜீவன் திட்டம்: கோவை மாவட்டத்தில் 5,593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு

கோவை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:42 pm

கோவை மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் குடிநீா் இணைப்பு வழங்குவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு சாா்பில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக நடப்பு நிதியாண்டில் 60 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல், மேல்நிலை மற்றும் தரைமட்ட தண்ணீா்த் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக ரூ.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இதுவரையில் 17.04 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொறுப்பு) ரூபன்சங்கா் ராஜ் கூறியதாவது:

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் 311 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள 50 ஆயிரத்து 953 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரையில் 5 ஆயிரத்து 593 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தவிர 158 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள், 119 ஆழ்குழாய் கிணறுகள், 56 தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டிகள், 178 பிரதான குடிநீா் குழாய் அமைத்தல் உள்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் 1,072 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதில் 70 பணிகள் முழுமையாகவும், 623 பணிகள் பகுதியளவும் முடிவடைந்துள்ளன. நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் அனைத்து திட்டப் பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.