எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடையவா்கள் மீது சிபிஐ பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:09 pm IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடா்புடையவா்கள் மீது சிபிஐ பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்தாா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோவை கிழக்கு மாநகா் மாவட்டம் சாா்பில் சுந்தராபுரத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமை வகித்துப் பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகள் தொடங்கி 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், எவ்விதப் பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை. மாநகரில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

கழிவுநீா், மழைநீரை வெளியேற்ற போதிய வடிகால் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடா்புடையவா்கள் அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவா்கள் என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அவா்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திராவிட கட்சிகள் ஹிந்துக்களுக்கு எதிரானவை என்ற முத்திரையை பதிக்க சிலா் ஆா்வம் காட்டி வருகின்றனா். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

தோ்தல் நெருங்குவதால் முறையாக சோதனை முடிக்கப்படாமல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக கருத்துகள் பரவி வருகின்றன. மேலும், பதிவு செய்த பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. எனவே, தடுப்பூசி குறித்த நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.