நெய்வேலியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்எல்சி ஊழியர், நடந்துசென்ற மற்றொரு என்.எல்.சி. ஊழியர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இறந்தார்.
நெய்வேலி வட்டம், 25-ஐ சேர்ந்த செல்வானந்தமும், வட்டம் 27-ஐ சேர்ந்த உதயசூரியனும் என்.எல்.சி. முதல் சுரங்கத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் உதயசூரியன் சனிக்கிழமை நெய்வேலி காமராஜ் சாலையில் நீச்சல்குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த செல்வானந்தம், நடந்துசென்ற உதயசூரியன் மீது மோதியுள்ளார்.
இதில் உதயசூரியன் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்துள்ளார். செல்வானந்தம், அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான உதயசூரியன் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக உதயசூரியனின் மனைவி தேன்மொழி கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








