நெய்வேலி அருகே கோயில் திருவிழா நடத்துவதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார். மோதலில் ஈடுபட்ட மற்றொருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி வடக்குமேலூர் அங்காளம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் இம்மாதம் 26-ம் தேதி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த நல்லாமூர்த்திக்கும் (27), தரணிக்கும் (22) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அப்போது தரணி, நல்லாமூர்த்தியை பழிக்குப் பழி வாங்குவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நல்லாமூர்த்தி வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த தரணி, நல்லாமூர்த்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி உள்ளார்.
பலத்தக் காயமடைந்த நல்லாமூர்த்தியை உறவினர்கள் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் திங்கள்கிழமை இறந்தார்.
இதையடுத்து நல்லாமூர்த்தியின் மனைவி காந்திமதி கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, தப்பியோடி தலைமறைவாக இருந்த தரணியை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா்! - வைகோ குற்றச்சாட்டு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

