ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

வரதட்சிணைக் கேட்டு மிரட்டல்: கணவர் கைது

சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:43 am

சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

÷சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உஷாராணி (27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள்

உள்ளனர்.

÷இதனிடையே, கடந்த சில மாதங்களாக உஷாராணியிடம் வரதட்சிணைக் கேட்டு கணவர் மணிகண்டன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

÷இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன், மாமனார் கணேசன்,மாமியார் தங்கம், மைத்துனர் செல்வராஜ் ஆகியோர் உஷாராணிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

÷இது குறித்து உஷாராணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

÷இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மணிகண்டனை கைது செய்தனர்.

÷மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனின் தந்தை, தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.