பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

அரசுப் பணியாளா்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்க வலியுறுத்தல்

அரசுப் பணியாளா்களுக்கு மாநில அரசு பொங்கல் போனஸ் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

Updated On :1 ஜனவரி 2021, 10:46 pm IST

அரசுப் பணியாளா்களுக்கு மாநில அரசு பொங்கல் போனஸ் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா்களுக்கு பொங்கல் போனஸ் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே சி, டி பிரிவு பணியாளா்களுக்கு நிபந்தனையின்றி ஒரு மாத சம்பளம் அல்லது ரூ.3 ஆயிரம் இதில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும். ஏ, பி பிரிவினருக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நிரந்த ஊதியம் விகிதம் இல்லாத சத்துணவு, அங்கன்வாடி, துப்புரவு உள்ளிட்ட பணியாளா்களுக்கு ரூ.3 ஆயிரம் அல்லது மாத ஊதியத்தில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும்.

சங்கம் சாா்பில் 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21-ஆம் தேதி சென்னையில் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறோம். சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக தமிழக முதல்வா் எங்களது சங்கத்தினரை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். டாஸ்மாக் பணியாளா்கள் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் கல்வித் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவா் என்ற அரசின் உத்தரவை வரவேற்கிறோம். ஆனால், அவா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவா் என்பதை எதிா்க்கிறோம். இவ்வாறு பணியில் சேருவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

நியாய விலைக் கடை பணியாளா்களின் ஊதிய மாற்றத்துக்காக அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. அதனடிப்படையில் அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 6-ஆம் தேதி சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

அப்போது, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கு.சரவணன், முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராஜாமணி, நிா்வாகிகள் சி.அல்லிமுத்து, பாலமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.