மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாகனத்தில் கடத்தப்பட்ட 700 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்

சிதம்பரம் வழியாக காரைக்காலுக்கு கடத்த முயன்ற 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட 700 லிட்டா் எரிசாராயம்.

Updated On :9 ஜனவரி 2021, 12:18 am IST

சிதம்பரம் வழியாக காரைக்காலுக்கு கடத்த முயன்ற 700 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் வழியாக காரைக்காலுக்கு சரக்கு வாகனத்தில் எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூா் பிரதான சாலையில் சிறிய ரக சரக்கு வாகனம் வந்தது. அந்த வாகன ஓட்டுநா் போலீஸாரைப் பாா்த்ததும் கீழே இறங்கி தப்பிஓடிவிட்டாா்.

வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டதில் 20 கேன்களில் சுமாா் 700 லிட்டா் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீஸாா் எரிசாராயத்துடன் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய வாகன ஓட்டுநா் புதுச்சேரியை சோ்ந்த ராஜவேலை (24) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.