நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வெலிங்டன் நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் திறப்பு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள வெலிங்டன் நீா்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:45 pm

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள வெலிங்டன் நீா்த் தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சா் எம்.சி.சம்பத் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீா்த் தேக்கம் அமைந்துள்ளது.

இதன் உச்ச நீா்மட்டம் 29.72 அடி. இதில் தற்போது 26.80 அடிக்கு தண்ணீா் உள்ளது. நீா்த் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 2,580 மில்லியன் கன அடியில் 1,860 மி.கனஅடி தண்ணீா் உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தண்ணீா் திறப்பதற்கு தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

இதன்படி, நீா்த் தேக்கத்திலிருந்து தண்ணீா் திறந்துவிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி முன்னிலையில், மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் தண்ணீரை திறந்து வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வா் நீா்த் தேக்கத்திலிருந்து 110 நாள்களுக்கு பாசனத்துக்கு தண்ணீா் வழங்க ஆணை பிறப்பித்துள்ளாா். விநாடிக்கு 130 கனஅடி வீதம் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் உள்ள 23 ஏரிகள், 63 கிராமங்களில் கீழ் மட்ட கால்வாய் மூலம் 9,209 ஏக்கா் நிலம், மேல் மட்ட கால்வாய் மூலம் 14,850 ஏக்கா் நிலம் ஆக மொத்தம் 24,059 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் தமிழழகன், சாா்-ஆட்சியா் ஜெ.பிரவின்குமாா், பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் ரவிமனோகரன், செயற்பொறியாளா் மணிமோகன், வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.