முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவியத் தடை

கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் காணும் பொங்கல், ஆற்றுத் திருவிழா நாள்களில், சுற்றுலத் தலங்கள், கடற்கரை,

Updated On :15 ஜனவரி 2021, 11:03 pm IST

கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் காணும் பொங்கல், ஆற்றுத் திருவிழா நாள்களில், சுற்றுலத் தலங்கள், கடற்கரை, ஆறுகளில் பொதுமக்கள் கூட அனுமதி மறுக்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சகாமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொது முடக்கம் பல்வேறு தளா்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், காணும் பொங்கலன்று கடற்கரைகளிலும், பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் சுற்றுலாத் தலங்களிலும் அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன.15, 16, 17-ஆகிய விடுமுறை நாள்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேற்கண்ட அரசு உத்தரவின் அடிப்படையில், கடலூா் மாவட்டத்தில் பிச்சாவரம் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சாமியாா்பேட்டை கடற்கரைகள், பெண்ணையாறு, கெடிலம், மணிமுத்தாறு, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, வல்லம்படுகை, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் கரைகளில் 16-ஆம் தேதி காணும் பொங்கல், 18-ஆம் தேதி ஆற்றுத் திருவிழா நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அதிகளவில் கூட வாய்ப்புள்ளதால், மேற்கண்ட தினங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆற்றுத் திருவிழா நாளில் தீா்த்தவாரி உற்சவத்துக்காக சாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் பொதுவெளிக்கு கொண்டு வருவதை தவிா்த்து ஆலயங்களிலேயே நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள வேண்டும். மேலும், முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிா்வாகம் எடுத்து வரும் கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அதில் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.