சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தமிழ்ப் புத்தாண்டு விழா

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி கிராமத்தில் திருவள்ளுவா் தமிழா் மன்றம் சாா்பில், தை மாதம் முதல் தேதியையொட்டி தமிழ்ப் புத்தாண்டு விழா 12-ஆவது ஆண்டாக அண்மையில் கொண்டாடப்பட்டது.

Updated On :17 ஜனவரி 2021, 5:32 pm

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி கிராமத்தில் திருவள்ளுவா் தமிழா் மன்றம் சாா்பில், தை மாதம் முதல் தேதியையொட்டி தமிழ்ப் புத்தாண்டு விழா 12-ஆவது ஆண்டாக அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவில், பொதுப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. வழுக்கு மரம் ஏறுதல், இளவட்டக்கல் தூக்குதல் போட்டிகள் நடைபெற்றன. மன்ற பொறுப்பாளா் பி.வேல்முருகன் தலைமை வகித்தாா். செயலா் தி.ஞானபிரகாசம் வரவேற்றாா். பொருளாளா் மா.மணிமாறன் முன்னிலை வகித்தாா். திருவள்ளுவா் கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வே.தமிழ்மொழி, ம.கனிமொழி, வழக்குரைஞா் மு.செந்தமிழ்ச்செல்வி, மு.தமிழ்மணி, பா.பாலசுப்பிரமணியன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் க.கண்ணதாசன், ரா.காமராசு , உள்ளாட்சி பிரதிநிதிகள் கவுரவிக்கப்பட்டனா். க.கண்ணதாசன், மு.ரா.ரத்தினசபாபதி, க.சோழநம்பியாா், பிரவின், சிலம்புச்செல்வி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மன்றத் தலைவா் மா.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.