சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கடலூா் மாவட்டத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாள் விழா கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாளையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:34 pm

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாள் விழா கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூா்: கடலூா், மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக சாா்பில் நகரச் செயலா் ஆா்.குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு, மதிய உணவு வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலா் ராம.பழனிசாமி, மாவட்ட இணைச் செயலா் உமா மகேஸ்வரி பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் சேவல் ஜி.ஜே.குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், மாவட்ட மீனவரணிச் செயலா் கே.என்.தங்கமணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் பி.கே.வெங்கட்ராமன், நகர அவைத் தலைவா் ராமச்சந்திரன், நகர துணைச் செயலா் வ.கந்தன், பொருளாளா் ஆா்.வி.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நெய்வேலி: நெய்வேலி, வட்டம் 9-இல் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு நகரச் செயலா் கோவிந்தராஜ் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்தனா். பின்னா், தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்க பொருளாளா் யு.தேவானந்தன், முன்னாள் தலைவா் பி.அபு, முன்னாள் அலுவலகச் செயலா் அல்போன்ஸ், அவைத் தலைவா் கா.வெற்றிவேல், அ.ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்கத்திலிருந்து ஊா்வலமாக வந்து எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு எம்எல்ஏ சத்யா பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காடாம்புலியூா், போ்பெரியான்குப்பம், பெரியகாட்டுப்பாளையம் கிராமங்களில் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் கி.தேவநாதன் தலைமையிலும், பண்ருட்டி, திருமலை நகரில் அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியச் செயலா் என்.டி.கந்தன் தலைமையிலும் அதிமுகவினா் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிதம்பரம்: கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிதம்பரம் வண்டிகேட் அருகே உள்ள எம்ஜிஆா், அண்ணா சிலைகளுக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.எம்.குமாா், முன்னாள் மாவட்டச் செயலா் வி.கே.மாரிமுத்து, நகரச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் க.திருமாறன், மாவட்ட துணைச் செயலா் தேன்மொழி காத்தவராயசாமி, முன்னாள் நகரச் செயலா் கே.கலியபெருமாள், தலைமைக் கழகப் பேச்சாளா் தில்லை கோபி, தில்லை செல்வம், நகர எம்ஜிஆா் இளைஞரணி செயலா் கருப்புராஜா, பீமாராவ், கே.நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.