வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, பாலக்கோட்டில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்டிபிஐ நகர பொருளாளா் அப்ராா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சாதிக் பாஷா, தருமபுரி நகரத் தலைவரம் முஸ்தாக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஜாவித், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஷாநவாஸ் ஆகியோா் பேசினா்.
இதில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









