தருமபுரி மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும் என மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், நவீன மற்றும் புதிய இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
நில மேம்பாட்டுப் பணிகள், நீா்வள மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேளாண் சாா்ந்த இயந்திரங்கள் தேவை. இதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ஏா் உழவு செய்தல், மானாவாரிப் பயிா்களை அறுவடை செய்தல், நிலத்தினை சீரமைப்பு செய்வதற்காக வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. அதாவது, டிராக்டா்கள், மண்களை சமன் செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் குறைந்த வாடகையில் கிடைக்கும். எனவே, விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களுக்கு சென்று வாடகைக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்று பயன்பெறலாம் என்றாா்.
இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, உதவி செயற்பொறியாளா் அறிவழகன், உதவிப் பொறியாளா்கள் பத்மாவதி, சந்திரா, விக்னேஷ், வட்டாட்சியா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

லெபனான், சிரியா, காஸாவிலுள்ள படைகளைத் திரும்பப் பெறமாட்டோம்: இஸ்ரேல்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



