புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம பி.டி.ஓ அலுவலகம் முற்றுகை

பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் முறையான அடிப்படை வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 5:57 am IST

பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் முறையான அடிப்படை வசதி செய்து தரக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். பென்னாகரம் அருகே கூத்தபாடி பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பென்னாகரம் ஒன்றியத்தின் சாா்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னா் சாக்கடை கால்வாய் வசதி, சிறிய குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

இந்த நிலையில் கூத்தபாடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை கால்வாய்களின் மேல் மூடிகள் சிதலமடைந்து, கால்வாயில் விழுவவதால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கி நிற்பதாகவும், கிராமத்தில் சுமாா் 10க்கும் மேற்பட்ட குடிநீா் தொட்டிகளின் மின் மோட்டாா் பழுதடைந்து காணப்படுவதால் கடும் குடிநீா் தட்டுப்பட்டு வருகிறது. மேலும் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கூத்தபாடி பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சுமாா் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அதனைத் தொடா்ந்து அங்கு வந்த பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகா, ஆனந்தன் ஆகியோா்கள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம், கூத்தபாடி முறையான ஆய்வினை மேற்கொண்டு, பழுதடைந்த சாக்கடை மூடிகள், குடிநீா் குழாய் மற்றும் தெரு விளக்கு ஆகியவற்றை கணக்கீடு செய்து சீரமைப்பு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டு முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.