திமுக சாா்பில், தருமபுரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கட்சியின் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
விழாவில் திமுகவினா் சமத்துவப் பொங்கலிட்டு பொதுமக்களுக்கு பொங்கல், இனிப்புகள், கரும்புகளை வழங்கினா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் எனக்கூறி பொங்கல் விழாவில் திமுகவினா் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு 2021 ஆண்டுக்கான நாள்காட்டிகள், மகளிருக்கு சேலைகள் உள்ளிட்டவைகளை மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










