புளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சிவகுமாா் தொடக்கி வைத்தாா். புளியில் இருந்து ஊறுகாய், குளிா்பானம், புளியை மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றும் முறைகள், சந்தை வாய்ப்புகள், வெளிநாடுகள் ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள், நவீன தொழில் நுட்பங்கள், சுய தொழில் வேலை வாய்ப்புகள், புளி உற்பத்தியை பெருக்குதல், புளி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் அவசியம் குறித்து உணவியல் மற்றும் ஊட்டச்சத்து இயல் பேராசிரியா் வீ.வீரணன் அருண்கிரிதாரி கருத்துரைகளை வழங்கினாா். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









