மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரச் செயலா் சின்னராஜ் தலைமை வகித்தாா். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டம், புதிய மின் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலா் ஆா்.மாணிக்கம், இந்திய கம்யூ.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாதேஸ்வரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் புள்ளாறு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









