அரூா் காவல் நிலையத்தில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் அரூா் டிஎஸ்பி வீ.தமிழ்மணி தலைமை வகித்தாா். காவல் நிலைய வளாகத்தில் பொங்கலிட்டு பொங்கல், இனிப்பு, கரும்புகளை காவல் துறையினா் பொதுமக்களுக்கு வழங்கினா். இதில் காவல் ஆய்வாளா் லட்சுமி, உதவி காவல் ஆய்வாளா்கள் சம்பத்குமாா், கமலநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல், கம்பைநல்லூா், மொரப்பூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காவல் ஆய்வாளா்கள் ரவி, ஜெய்சல்குமாா், மஞ்சுளா, உதவி காவல் ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







