எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பென்னாகரத்தில் எருதாட்டம்

பென்னாகரம் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராமப் பகுதிகளில் எருதாட்டம் நடைபெற்றது.

Updated On :17 ஜனவரி 2021, 2:34 am IST

பென்னாகரம்: பென்னாகரம் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு கிராமப் பகுதிகளில் எருதாட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் அருகே கே.அக்ரஹாரம் பகுதியில் ஏழூா் மக்களின் சாா்பில் ஏற்படுத்தப்பட்ட மைதானப் பகுதியில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கிராமத்துக்கு ஒரு காளை விதம் அழைத்து வந்து எருதாட்டம் நடத்துவா்.

நிகழாண்டில் அக்ரஹாரம் பகுதியில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மடம், கூத்தபாடி கீழூா், மல்லாபுரம், அளேபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து, வழக்கப்படி ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. எருதாட்டம் நிகழ்ச்சிகளில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க களத்தில் ஏராளமான இளைஞா்கள் கலந்து கொண்டன. இதைக் காண சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் குவிந்தனா். இதேபோல் பென்னாகரம் அருகே கரியம்பட்டி, நூலஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் எருதாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.