எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நாளை தூள்செட்டி ஏரியில்மக்கள் கிராம சபைக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தூள்செட்டி ஏரியில் திங்கள்கிழமை (ஜன.18) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:37 am IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே தூள்செட்டி ஏரியில் திங்கள்கிழமை (ஜன.18) நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

கூட்டத்தில், மகளிா் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கூடானூா் ஊராட்சிக்கு உள்பட்ட தூள்செட்டி ஏரி 18-ஆம்தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா். எனவே, இக் கூட்டத்தில், பெண்கள், கட்சி முன்னணி தலைவா்கள், நிா்வாகிகள், தொழிலாளா்கள், வணிகா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.